4. அருள்மிகு பால்வண்ணநாதர் கோயில்
இறைவன் பால்வண்ணநாதர்
இறைவி வேதநாயகி
தீர்த்தம் கொள்ளிடம், பஞ்சாக்கரத் தீர்த்தம்
தல விருட்சம் வில்வ மரம்
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
தல இருப்பிடம் திருக்கழிப்பாலை, தமிழ்நாடு
வழிகாட்டி சிதம்பரத்திற்கு தென்கிழக்கே 5 கி. மீ. தொலைவில் உள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு தெற்கில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Thirukazhipalai Gopuramதற்போது 'கழிப்பாலை கோயில்' என்று அழைக்கப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றங்கரையில் இக்கோயில் இருந்ததாகவும், ஒருசமயம் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அக்கோயில் அழிந்துவிட்டதாகவும், தற்போது உள்ள இடத்தில் இக்கோயில் எழுப்பப்பட்டதாகவும் கூறுவர். இக்கோயில் உள்ள அதே தெருவில் 'திருநெல்வாயில்' என்னும் மற்றொரு தேவாரத் தலமும் உள்ளது.

மூலவர் 'பால்வண்ணநாதர்' என்னும் திருநாமத்துடன், அழகிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை 'வேதநாயகி' என்னும் திருநாமத்துடன் காட்சி அளிக்கின்றாள். இக்கோயிலில் உள்ள பைரவர் தனது வாகனம் (நாய்) இல்லாமல் தனியாக உள்ளார். இதேபோல் காசியில் உள்ளதால் இது காசிக்கு ஒப்பானதாகக் கருதப்படுகிறது. அஷ்டமி நாட்களில் இவருக்கு சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

Thirukazhipalai Praharamஇக்கோயில் உள்ள அதே தெருவில் 'சிவபுரி' அழைக்கப்படும் 'திருநெல்வாயில்' என்னும் மற்றொரு தேவாரத் தலம் உள்ளது.

திருஞானசம்பந்தர் 2 பதிகங்களும், அப்பர் 4 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 7 மணி முதல் 11 வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com